ஈ-சிற்றி விருது வழங்கும் விழா – 2017


ஈ-சிற்றி விருது வழங்கும் விழா – 2017

Posted on:
2017-09-30 07:21:34

ஈ-சிற்றி விருது வழங்கும் விழா – 2017

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கிவரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூhயில் ஆங்கில, சிங்கள, கணனிப் பாடநெறிகளைப் பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ்கள் மற்றும் சமூகசேவை செய்தவர்களுக்கான கௌரவிப்பு வைபவம் கல்லூரியின் அதிபர் தேசகீர்த்தி லயன்.ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில்01.10.2017 அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் எந்திரவியல் பிரிவின் தலைவர் கலாநிதி சிவகுமார் சிவசுப்பிரமணியம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரியின் அதிபர் திருமதி மிமலாதேவி விமலநாதன் அவர்கள் மற்றும் கௌரவ விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ சந்திரலிங்கம் சுகிர்தன் அவர்கள் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.